தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், பேராவூரணி