புகை மூட்டதால் அவதி

Update: 2024-04-21 12:20 GMT

புகை மூட்டதால் அவதி

அவினாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் உரக்குழி என்ற பெயரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அனைத்தும் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் அணையா விளக்காக உள்ளன, இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்கிறார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஹீம் அங்குராஜ், அவினாசி

82207 77888

மேலும் செய்திகள்