தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பேரூராட்சி, சிவக்கொல்லையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு சின்னம் சிதிலமடைந்து உள்ளது. மேலும் வர்ணம் பூசாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 75 -வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவமணி,மதுக்கூர்