செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோயில் பஜார் வீதியில் உள்ள நடைபாதை சாலையின் இரு புறமும் இருசக்கர வாகனங்கள நிறுத்துவதால் பொதுமக்கள் நடந்து செல்லக் கூட வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோர கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும்.