உடனடி நடவடிக்கை

Update: 2022-08-18 15:38 GMT
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பெரியார் மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் தேசமடைந்து இருந்தது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கையாக தற்போது அந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்