திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு, தாழவேடு ஊராட்சியில் தலைவரே இல்லாமல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர யாருமில்லாமல் கிராம சபை கூட்டம் அரங்கேறியது. இதனால் தங்கள் குறைகள் சம்பந்தபட்ட துறைக்கு கொண்டு செல்லப்படுமா? என்னும் சந்தேகத்தில் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். இனி வரும் நாட்களில் சரியான முறையில் கிராம சபை கூட்டம் நடைபெற வலியுறுத்த வேண்டும்.