வட சென்னை மாதவரம், புக்ராஜ் நகர் 1-வது மற்றும் 5-வது தெருவில் உள்ள மின் விளக்குகள் மரத்தின் இடையே உள்ளதால் போதிய வெளிச்சம் இல்லை. மேலும் ஓரு விளக்கு முற்றிலும் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும்.