சென்னை மணலி சின்னசெக்காடு ராஜி தெருவில் கழிவு நீர் கால்வாய் சரி வர செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் தெருவில் உள்ள சாலைகளில் கழிவு நீர் ஓடுவதால் அப்பகுதியில் துற்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியின் வழியே பல பள்ளி மாணவர்கள் தினமும் செல்கின்றனர், தினமும் கழிவுநீரால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பொதுமக்களும் சாலையை கடக்க அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்