பூட்டியே கிடக்கும் கால்நடை மருத்துவமனை

Update: 2022-08-07 15:52 GMT
கோம்பைத்தொழு கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் கால்நடை மருத்துவமனை பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் கோம்பைத்தொழு கிராம விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்நடை மருத்துவமனையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்