மயிலாடுதுறை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.