சென்னை-பெங்களூரு விரைவு சாலையில் இருந்து இரண்டு சாலைகள் பிரிகின்றன. நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் தாண்டி இடதுபுறம் திரும்பும் சாலை, மற்றொன்று ராமாபுரம் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பும் சாலை. பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி, இரண்டு சாலைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள். இரண்டு சாலைகளில் ஏதாவது ஒரு சாலையின் வேலைகளையாவது விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறார்கள்.