மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கலை அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் உரிய நேரத்தில் பஸ் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கல்லூரி அருகே பஸ் நிறுத்தமும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் கிடைக்கும் பஸ்சில் மாணவர்கள் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள், மணல்மேடு.