கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்தப் பகுதியில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. இதனால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட மாற்று வழியை தான் நம்பி உள்ளனர். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு பஸ் வசதியை கூடிய விரைவில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.