திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தில் இருந்து பேரம்பாக்கம் வரை செல்லும் சுமார் 4 கிலோ மீட்டர் வரை உள்ள சாலையில் மின்விளக்கு வசதிகளே கிடையாது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது. எனவே சத்தரை கிராமத்திலிருந்து பேரம்பாக்கம் வரை செல்லும் சாலையில் மின்விளக்கு வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும்.