மதுபான பாராகும் சாலையோரங்கள்

Update: 2022-07-28 16:03 GMT

தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் கம்பம் சாலையோர பகுதிகள் மாலை நேரங்களில் திறந்தவெளி மதுபான பார் ஆக மாறி வருகிறது. அந்த பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடு இன்றி தள்ளுவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை மறைவிடமாக பயன்படுத்தி பலரும் மது அருந்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களையும் அங்கேயே உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். தேனியின் பிரதான சாலையாக இருந்த போதிலும் இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, இப்பகுதியை திறந்தவெளி மதுபான பார் ஆக மாறுவதை தடுக்கவும், அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்