திருவாரூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை உள்பட பலர்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து , கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.