விளை நிலத்தில் வீசப்படும்மதுபாட்டில்களால் விவசாயிகள் அவதி

Update: 2023-06-14 11:28 GMT

விளை நிலத்தில் வீசப்படும்

மதுபாட்டில்களால் விவசாயிகள் அவதி

பல்லடம் பகுதியில் சிலர் மதுபானங்களை வாங்கி வந்து வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்கள் அருகே குடித்துவிட்டு, அங்கேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொள்ளும் போது உடைந்த கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர் மேலும், மேய்ச்சல் நிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணுவதால், அவற்றின் வயிற்றில் சிக்கி கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து திறந்தவெளிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் அமர்ந்து மது அருந்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேஷ்,பல்லடம்.

98765542736

மேலும் செய்திகள்