மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதன் காரணமாக பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இதனால் பள்ளி நேரங்களில் மாடுகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றித்திரியும் மாடுகளை பட்டியில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சீர்காழி