சென்னை மடிப்பாக்கம், விஷால் நகரில் மழைநீர் வடிகால் உடைந்து காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள சாலை மோசமாக இருப்பதால் வாகனங்கள் உடைந்த கால்வாயில் சிக்கிக் கொள்கிறது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிபட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.