'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-05-07 17:36 GMT

சேலம் 33-வது வார்டு அம்மாபேட்டை மண்டல தீர்த்தகிரி ரோடு அருகில் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி பணி நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செயதிக்கு உதவிய 'தினத்தந்தி' க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ரத்தினம் விஸ்வா, சேலம்.

மேலும் செய்திகள்