புதுச்சேரி மரப்பாலம் நேருநகர் 2வது குறுக்குத்தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசுாிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மின்துறை ஊழியர்கள் உடனடியாக தாழ்வாக சென்ற மின்கம்பியை சரிசெய்தனர். இதற்கு காரணமாக இருந்த தினத்தந்திக்கும், மின்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.