பேருந்து வசதி தேவை

Update: 2023-04-10 06:27 GMT

செங்கல்பட்டு - உத்திரமேரூர் செல்லும் வழியில் உள்ள திருப்புலிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். குறிப்பாக, செங்கல்பட்டிலிருந்து அதிகமான அளவில் மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆனால், செங்கல்பட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. பயணிகளும், கல்லூரி மாணவர்களும் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே இந்த வழி தடத்தில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


 

மேலும் செய்திகள்