குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-03-22 13:13 GMT

சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் 8-வது தெருவில் ஏராளமான கும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீரை தேவைக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் பைபிகள் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து கலங்கலான நீர் வருவதால் இப்பகுதி மக்கள் இந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வாரியத்தினர் இதுகுறித்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்