ஊரின் பெயர் எழுதப்படுமா?

Update: 2023-03-22 12:03 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் ஊரின் பெயர் எழுதாமல் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் எந்த ஊர் செல்லும் பஸ் என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர் ஆகையால்.பஸ்சில் ஊரின் பெயர் எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குத்தாலம்

மேலும் செய்திகள்