'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2023-03-22 06:22 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தேர்நிலையத்தில் இருந்து ஊர்சாவடி செல்லும் சாலையில் தனியார் நகை கடை அருகே இருந்த வேகத்தடையை தைமாத தேர் திருவிழாவின்போது அகற்றினர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், மீண்டும் அதே பகுதியில் வேகத்தடையை அமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு வேகத்தடை அமைத்து வர்ணம் பூசினர். மேலும் அந்த இடத்தில் விபத்து ஏற்படுவதால் அபாய விளக்கு பொறுத்தி வாகனத்தில் செல்வோருக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்