பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-03-15 14:45 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருமஞ்சன வீதி எடத்தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் சரியாக மூடப்படாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் முந்தி செல்ல முயல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்