மது விற்பனை தடுக்கப்படுமா?

Update: 2023-03-08 11:31 GMT


மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் சட்ட விரோதமாக காரைக்கால் மது பானம் விற்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

பொதுமக்கள், ஆக்கூர்

மேலும் செய்திகள்