குரங்குகள் தொல்லை

Update: 2023-01-18 12:18 GMT


மயிலாடுதுறை மாவட்டம் துலாகட்டம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும்அச்சப்படுகின்றனர். மேலும் குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அள்ளிசென்று விடுகின்றன.குழந்தைகள் மற்றும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை 

மேலும் செய்திகள்