மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் இருக்கைகள் மற்றும் இருந்த இரும்பு கைப்பிடிகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து செய்தி "தினத்தந்தி" புகார் பெட்டியில் வெளியானது. இதை அதிகாரிகள் உடனடியாக கவனித்து ஆக்கூர் பஸ் நிலையத்தில் புதிதாக கைபிடிகள் அமைத்தனர். இதனை அறிந்த அந்த பஸ் பயணிகள் தவறை சுட்டிகாட்டிய "தினத்தந்தி" நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினர்.
பொதுமக்கள், ஆக்கூர்