செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மேலையூர் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பம் - கருநிலம் சாலையில் கொண்டங்கி ஏரி உபரி நீர் வெளியேறும் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் இருக்கும் பகுதியில் உள்ள சாலை குறுகலாக இருப்பதால் சாலைவாசிகளும், வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. இந்த பிரச்சினை தீர வழி என்னவோ!