மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் செல்லும் அரசு பஸ் அடிக்கடி பழுதாகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் போதுமான பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களை முறையாக பராமரித்து,பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை