வண்டலூர் பாலம் அருகே சிறிய இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி வழியாக சிலர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள். சில நேரங்களில் மக்கள் கவன குறைவாக ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே ரெயில்வே நிர்வாகம் விபத்துக்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.