செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மேலமையூர் பகுதியில் உள்ள நியூ காலனி, டாக்டர் அம்பேத்கர் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுவதால் மழை காலத்தில் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.எனவே வடிகால்வாய் அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.