'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-11-02 17:02 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சி மெயின் ரோட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பூங்காவில் நடை பயிற்சி, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பூங்காவில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளித்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி அந்த பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவி 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-மகாலட்சுமி, பச்சுடையாம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்