செங்கல்பட்டு மாவட்டம் அகரம்தென் ஊராட்சி கஸ்பாபுரம் சாய் பாலாஜி நகரில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லை. மண் சாலையை மட்டுமே அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலத்தில் மண் சாலை சேறும், சகதியும் ஆக மாறும்நிலை உள்ளதால், அருகில் இருக்கும் கடைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கூடிய விரைவில் தார்சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.