செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பஸ் நிலையத்திலிருந்து ரெயில் நிலையம் செல்வதற்காக நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அலுவலக நேரங்களில் பெரும்பாலும் இந்த படிகட்டுகள் பழுதடைந்தே காணப்படுகின்றன. இதனால் வெறும் காகட்சிப்பொருளாகவே நகரும் படிகட்டுகள் காணப்படுகின்றன. முதியோர்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள்.