'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-10-09 17:44 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கியில் ஒரு பயணிகள் நிழற்கூடத்தில் வைக்கோல் போர் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் வைக்கோல் போர்களை அகற்றி நிழற்கூடத்தை சுத்தம் செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ராஜ்குமார், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்