சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 18-வது குறுக்கு தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து எழும்புக்கூடு போல் இருப்பதால், எப்போது வேண்டுமென்றாலும் சாய்ந்து கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியம் துரித நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைத்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.