சென்னை அடையாறு வெங்கடரத்தினம் நகரில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகள்(கம்பம் என் : 673, 674) எரியவில்லை. இதனால் மாலை வேளையில் கூட இந்த சாலையில் இருள் நிறைந்து காணப்படுகிறது. இரவில் அதிகமான திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. இந்த சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விநாயகர் கோவில் இருப்பதால் தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.