தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-10-01 13:17 GMT
புவனகரி தாலுகா பூதவராயன்பேட்டை புது காலனியில் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்பட்டு வந்த மின்மோட்டார் பழுதானதால் அப்பகுதி மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்மோட்டார் பழுதை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்