கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-28 15:05 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கருவேல மரங்கள் சாலையை மறைத்தபடி வளர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவெண்காடு.

மேலும் செய்திகள்