சென்னை வேளச்சேரி நேரு நகர் அவ்வையார் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி அபாயகரமாக காட்சியளிக்கிறது. சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டி உடைந்து கீழே விழுந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. மேலும் அருகே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டியை சீர் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.