மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பந்தநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பந்தநல்லூர்