மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம் ,நடைமேடை பகுதிகளில் செடி கொடிகள் படர்ந்து புதர் போல உள்ளது. மேலும் ரெயில் நிலையம் வளாகம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்