சென்னை அடையாறு இந்திரா நகர் 11-வது சந்து பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த நிர்வாகத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.