கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-26 13:15 GMT


மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதன் மரக்கிளைகள் சாலையை மறைத்தப்படி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மணல்மேடு

மேலும் செய்திகள்