திருவொற்றியூர் ஹன்சா ஜெம்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.