திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ் நிலையம், ஜி.என்.டி. சாலையில் உள்ள மின் விளக்கு கம்பம் ஒன்று அடியோடு சாய்ந்து அருகில் உள்ள சிக்னல் கம்பத்தை தாங்கிபிடித்தப்படி இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்கம்பத்தை சீரமைத்து சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.