சென்னை தியாகராய நகர், நரசிம்மன் 1-வது தெருவில் மின்பெட்டி கடந்த சில நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் அதனை கடந்து செல்கின்றனர். இங்கு குழந்தைகளும் விளையாடுவதால் தினமும் பயத்துடனே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்து தரவேண்டும்.