துரித நடவடிக்கையால் மகிழ்ச்சி

Update: 2022-09-22 14:47 GMT

சென்னை அடையாறு இந்திரா நகர் 16-வது குறுக்குத் தெருவில் கழிவு வடிகால்வாய் மூடி மிகவும் சேதமடைந்துள்ளது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் வடிகால்வாய் மூடி சீரமைக்கப்பட்டது. இதில் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சிக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்

மேலும் செய்திகள்